துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி கணக்கு முடித்தல்) நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.
முதல் நாளான (16-06-2026) கொப்பம்பட்டி வருவாய் பகுதிக்கான ஜமாபந்தி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வருவாய் பகுதிகளில் உள்ள தளுகை ,வைரிசெட்டிபாளையம், கொப்பமாபுரி, காரபுடையான்பட்டி, கொப்பம்பட்டி,சோபனபுரம், தென்புறநாடு உள்ளிட்ட கிராம பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா பெயர் மாற்றம்,புதிய குடும்ப அட்டை , இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று, கலைஞர் மகளிர் உதவி தொகை உள்பட 70 கோரிக்கை மனுக்களை சார் ஆட்சியரிடம் கொடுத்தனர்.இந்த மனுக்களில் ஒரு மனுவிற்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள 69 மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று முசிறி சார் ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வட்டாட்சியர் வனஜா, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட வட்டாட்சியர் ராதா, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் ரெங்கராஜீ,சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பழனிவேல், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்திர மவுலி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர்கள் ராமு, ராஜேந்திரன்,தேர்தல் பிரிவு வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி,கொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் ஆசைத்தம்பி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
