கோயம்புத்தூர்,
ராஜா குழுமத்தின் KSR ரியால்ட்டி நிறுவனம், கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் அருகே மைலேரிபாளையத்தில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான “KSR கோவை கார்டன்” திட்டத்தை ஜூன் 6 மற்றும் 7, 2026 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்துகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் KSR ரியால்ட்டி, தரமான உள்கட்டமைப்பு, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் நீண்டகால முதலீட்டு மதிப்பை மையமாகக் கொண்டு பல்வேறு வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மண்டலமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள KSR கோவை கார்டன் திட்டம், சிறந்த சாலை இணைப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகர்ப்புற வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இது குறித்து KSR ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் RTN. கே. சுரேந்தர் ராஜ் கூறுகையில்,
“நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. KSR கோவை கார்டன் திட்டம், சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், நீண்டகால முதலீட்டு வளர்ச்சியையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதையில் முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்றார்.
அறிமுக விழாவில் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சேனல் பங்குதாரர்கள் பங்கேற்று திட்டத்தை நேரில் பார்வையிடுவதோடு, பிரத்யேக அறிமுக சலுகைகளையும் பெறலாம்.
