செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக
சுற்றுச்சூழல் தினம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் பழைய சேர் பழைய பேப்பர்கள் ஆகியவைகள் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தூய்மை காவலர்கள் துய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இனைந்து ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன் வட்டார ஊராட்சி ஜெகன்
கிராம ஊராட்சி ஆகியோர்களின் முன்னிலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா மதுரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் ராஜசேகரன் ஊராட்சிகள் தயாநிதி, மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்நிகழ்வுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஏற்பாடு
செய்து நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.