ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கிராம பிள்ளையார் கோவிலில் இருந்து டோல் மேளம், சிப்லாமேளம் முழங்க வானவேடிக்கையுடன் சிறுவர், சிறுமியர் சிலம்பு, சுருள் வாள் மற்றும் சிலம்பு பந்து ஆட்டங்களுடன் ஊர்வலமாக 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து கிராம வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து முத்துராமலிங்க தேவர் சிலையை அடைந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .