சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 100.க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் உள்ளன. இந்த நிலையில் அரசம்பட்டியில் உள்ள ஜே.சி.பி.உரிமையாளர் சங்கத்தினர்.
2வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஜேசிபி வாகனங்களின் காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை கடும் உயர்வு, சாலை வரி உயர்வு, டிரைவர் கூலி உயர்வு போன்றவற்றால் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாலை வரி, காப்பீடு கட்டணம், உதரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் போச்சம்பள்ளி பகுதியில் கட்டுமான பணிகள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பேட்டி. சரவணன் ஜேசிபி உரிமையாளர்