ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட போட்டி நேற்று நடைபெற்றது.இந்த போட்டியை முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார்.இப் போட்டி எட்டிசேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கி பேரையூரில் உள்ள பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை நடைபெற்றது .
இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியோர் மாற்றுத்திறனாளிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 7 கிலோமீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர்கள் ஆண் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.6 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள் வழங்க பட்டது.பெண்கள் பிரிவில் பரமக்குடி அசுகரன் விளையாட்டு கழகத்தை சேர்ந்த
மைக்கில்பெல்சியா முதலிடமும், ஆண்கள் பிரிவில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமர் முதலிடமும் பெற்றனர்.
மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது.இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பூ வைசிய இந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.