திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலத்தைச் சேர்ந்த அபு என்கிற இப்ராஹிம் என்பவர் கடந்த ஐந்து மாதங்களாக கழிவு பஞ்சுகளை அரைத்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 20 வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இயந்திரங்களை பழுது பார்த்தபோது திடீரென ஆலையின் பின்புறம் கழிவுகளை வெளியேற்றும் பகுதியில் இருந்து தீ பிடிக்கத் தொடங்கியது தீ ஆளை முழுவதுமாக பரவி கழிவு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் முழுவதுமாக பற்றி எறிய தொடங்கியது

அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக திருப்பூர் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் இரண்டு மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்

இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் மற்றும் கட்டிடங்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது தீயணை அணைப்பது பெரும் சவாலாக உள்ள நிலையில் கூடுதலாக தண்ணீர் ராளிகளை கொண்டு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர் மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து மங்களம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *