துறையூர் ஏப்-16
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை, ஊராட்சி துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சி திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து துறையூர் சின்ன ஏரியை நேரில் பார்வையிட்டு ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

பழைய பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு நகராட்சி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான பணிகள் பற்றி கேட்டு பணியை விரைந்து செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை தற்காலிக புதிய பேருந்து நிலையம் ஆகிவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் சமூக நல வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீராம், நகராட்சி உதவி பொறியாளர் ஆதித்யா, ஒப்பந்ததாரர் வினோத் மற்றும் அரசு துறை அதிகாரிகள் இருந்தனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *