மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
ஆசிரியை அருவகம் வரவேற்றார். வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பல குரல் போட்டியில் முதலிடம் பிடித்த கோமுகிலன், மணல் சிற்பத்தில் இரண்டாம் இடம் பிடித்த சகாபுதின், மாறுவேடத்தில் இரண்டாம் இடம் பிடித்த செய்யது முகமது, தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சமீரா பானு ஆகிய குழந்தைகள் பாராட்டு பெற்றனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
ஆசிரியை அனுஷியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை அகிலா நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
